சின்னஞ்சிறு சிட்டே -கடிதங்கள்

ksarangapani-175x250

 

அன்புள்ள ஜெயமோகன்,

பல நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன், நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

சின்னஞ்சிறு சிட்டே பாட்டைப் பற்றிய பதிவைப் பார்த்ததும் எழுதாமல் தீரவில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாட்டுக்களில் ஒன்று. அந்தக் காலத்து திரைப்பட lowbrow பாட்டுக்களில் ஒரு தனிக் கவர்ச்சி இருக்கிறதல்லவா? மந்திரிகுமாரியில் ‘அந்தி சாயுற நேரம்’, ஆரவல்லியில் ‘சின்னக்குட்டி நாத்தனா’, வண்ணக்கிளியில் ‘சித்தாடை கட்டிக்கிட்டு’, உத்தமபுத்திரனில் ‘புள்ளி வைக்குறான்’ என்று சொல்லிக் கொண்டே போகலாம். எஸ்.சி. கிருஷ்ணனுக்காகவே நேர்ந்துவிடப்பட்ட பாடல்கள், அவ்வப்போது திருச்சி லோகநாதனும் சேர்ந்து கொள்வார்.

சின்னத் தகவல் பிழை. எம்.என். ராஜத்துடன் கூட ஆடுவது சாரங்கபாணி, தங்கவேலு அல்ல. தங்கவேலுவும் இந்தப் படத்தில் உண்டு, அவருக்கு ஒரு பாட்டும் உண்டு – ‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா!’. அப்புறம் ஒரு typo – அவர் எஸ்.சி. கிருஷ்ணன், எஸ்.ஜி. கிருஷ்ணன் அல்ல.

அருண்மொழிக்கு என் அன்பு.

மாறாத அன்புடன்

ஆர்வி.

*

அன்புள்ள ஆர்வி

பார்த்தேன், சாரங்கபாணிதான். எனக்கு தங்கவேலுவே சரியாக முகம் நினைவில்லை. நான் மிகக்குறைவாகவே தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கிறேன். என் 16 ஆம் வயதுவரை நான் பார்த்த படங்கள் மொத்தமே எட்டுதான்

இந்தப்பாடலின் மெட்டு அக்காலத்தைய இங்கிலீஷ் சோல்ஜர் சாங் என அழைக்கப்பட்ட ஐரோப்பிய நாட்டுப்புற இசையில் இருந்து எடுக்கப்பட்டது. போர்க்காலத்தில் இவ்விசை இந்தியா எங்கும் பிரபலமாகியது.

மாமா மாமா , சின்னக்குட்டி நாத்தனா போன்றவை தெம்மாங்கு மெட்டுக்கள். பின்னாளில் இவை இரண்டும் இணைந்து ஒன்றாயின.

நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்

ஜெ

***

எழுத்தாளர் அவர்களுக்கு,

ஸ்ரீநிவாசன் சாருக்கும் அனுப்புகிறேன் ,

http://www.jeyamohan.in/93384

“இந்தப்பாடலில் தங்கவேலு இயல்பாக நடிக்கிறார்.”

இந்த பதிவில் பாடலில் வருபவர் தங்கவேலு என்று வந்துள்ளது.

அவர் சாரங்கபாணி அல்லவா. அவரை பற்றிய விவரணைகள் எல்லாம் சரியாக தான் உள்ளன. ஆனால் பெயரிலும் மற்றும் விக்கி சுட்டியும் தங்கவேலுவை குறிக்கிறது.

சுட்டி இதுவாக இருக்க வேண்டும்

https://en.wikipedia.org/wiki/K._Sarangkapani

இந்த படத்தில் தங்கவேலுவும் உள்ளார். “உல்லாச உலகம் உனக்கே சொந்தம் ” — பாட்டில் கலக்கி இருப்பார்.

சாரங்கபாணி பற்றி பேசும்போது என் சிறுவயதில் என் அப்பா ஒன்று சொன்னது நியாபகம் வருகிறது.

அப்போது எல்லாம் நாடக நடிகர்களுக்கு வருட கணக்காக troupe-ல் ஒப்பந்த அடிப்படையில் இருப்பார்களாம். அப்படி சாரங்கபாணி மற்றும் அவர்கள்ளோடு குழுமத்தில் இருந்தவர்கள் ஒரு troupe-ல் மாட்டி கொண்டு இருதார்கள் என்பதாகவும். அவகளுக்கு வேண்டும் என்றே சுண்ணாம்பு கலந்த சோறு கொடுத்து ஒரு வீட்டில் அடைத்து தான் நடிக்க வைத்தார்கள் என்றும் சொன்னார் என் தந்தையார்.

ஓட்டை பிரித்து அவர்கள் வெளிவந்து பின்னர். என் தந்தையின் தாயார் வழி தாத்தா, அவர்களுக்காக வழக்கு ஆடி அவர்கள் சிக்கல்களில் இருந்து வெளிவந்தார்கள் என்றும் சொல்வார். சாரங்கபாணி அவர்கள் இந்தன் காரணம் என் கொள்ளு தாத்தா மீது மரியாதை உண்டு என்று என் தந்தையார் சொல்ல கேட்டு இருக்கின்றேன்.

சிறு வயதில் கேட்டது. பொதுவாக மறக்க மாட்டேன் — ஆனால் நான் சொன்னதில் தவறுகள் இருக்கலாம்.

பெயரையும் சுட்டியும் சரியா என்றும் பார்த்து விடுங்கள்.

நன்றி

வெ. ராகவ்

***

அன்புள்ள வே ராகவ் [நெல்லை மொழியில்]

நலமா?

இவ்வளவு தகவல்களை அனுப்புகிறவர்கள் இவற்றை எல்லாம் விக்கியில் தகவல்களாகப் பதிவுசெய்யலாமே. பொதுவான தகவல்களஞ்சியம் இணையம்தான். அது உடனே கிடைக்கவும் வேண்டும்.

சாரங்கபாணி தங்கவேல் பற்றி சாதாரணமான தகவல்களோ நல்ல படங்களோ கூட இணையத்தில் இல்லை

ஜெ

***

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் ஜில் ஜில் என ஆடிக்கொண்டி பதிவில்

அந்தப் பாடலில் எம்.என்.ராஜத்துடன் நடனமாடுபவர் பெயர் கே.சாரங்கபாணி என்று நினைவு.

இவரின் புகைப்படத்தினை இந்த இணைப்பினைக் கிளிக் செய்து பார்க்கவும்.

https://antrukandamugam.files.wordpress.com/2015/09/k-sarangapani-as-dowlath-marzianas-sidekick-and-a-dholak-player-alibabavum-40-thirudargalum-1956-1.jpg?w=593&h=311

பதிவில் தங்கவேல் என்பதற்குப் பதிலாக கே.சாரங்கபாணி என்று மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஆள் கூட டணால் தங்கவேல் போல அல்ல என்பதை சற்றே கவனித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

பெரும் பணியில் இருக்கின்றீர்கள் என்பது எனக்குப் புரிகிறது.

http://spicyonion.com/tamil/actor/k–sarangapani-movies-list/

 

முந்தைய கட்டுரைவண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?
அடுத்த கட்டுரைவருகையாளர்கள் 5, நாஸர்