எந்திரன், நான், இந்தத்தளம்…

Cxs-kXQVQAA108H

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

திரு.ஷங்கர் அவர்களின் ‘2.0’ திரைப்படத்திற்கான முதல்தோற்ற வெளியீட்டுவிழாவைப் பற்றிய தங்கள் அறிவிப்பையும், அதில் நீங்கள் கலந்துகொள்ள இருப்பதையும் அறிந்து மகிழ்ந்தேன். நீங்களும் அதில் அடைந்த/அடையப்போகும் ‘பரவசத்தை’ பற்றியும் குறிப்பிட்டு இருந்தீர்கள்.ஏற்கனவே நீங்கள் முன்பு எழுதியபடி-“இந்தத்தளம் சினிமாவுக்கானது அல்ல“- என்றாலும் இதன் மூலம் தங்களின் பொருளாதாரத்தேவைகள் குறைந்த காலத்தில் பூர்த்தி செய்யப்படுவதால் உங்களின் நேரமும், உழைப்பும் ‘வெண்முரசு‘ போன்ற இலக்கியப் படைப்புகளுக்கு வெகுவாக கிடைக்கிறது. எனவே இதில் மிகுந்த ஆதாயம் அடைவது என்னைப் போன்ற எளிய வாசகர்கள்தான் என நினைக்கிறேன். அந்தவகையில் இது எங்களுக்கும் ஒரு கொண்டாட்டம்தான்!.

நன்றி.

அன்புடன்,

அ .சேஷகிரி.

*

அன்புள்ள சேஷகிரி

அந்தப்பதிவை என் பயணம் பற்றிய பொதுவான தகவலாகவே போட்டிருந்தேன். விரிவாக எழுதவில்லை.

எந்திரன் படம் ஒரு பெரும் வணிக முயற்சி. அதற்கு பெரும்பணத்தில் விளம்பரம் செய்வார்கள். தொடர் விவாதங்கள் உருவாகும். அதை நான் என் தளத்தில் செய்ய ஆரம்பித்தால் அதற்கு மட்டுமே நேரமும் இடமும் இருக்கும்

ஆகவே நான் எழுதும் சினிமாக்களைப்பற்றி ஒரு சில வரிகளை மட்டும் எழுதி, நிகழ்ச்சிப் பதிவாகவே நிறுத்திக்கொள்வது வழக்கம். முன்னரும் அப்படித்தான். விவாதம் உரையாடல் எதையும் இங்கே அனுமதிப்பதில்லை. இனிமேலும் அப்படித்தான்

ஜெ

***

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று மதியம் ஜெயா தொலைக்காட்சியில் ஒளி பரப்பிய திரு.சங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 2.0 திரைப்படத்தின் ‘முதல் பார்வையை” பார்த்தேன்.போங்க சார்! இப்படியா அநியாயத்திற்கு மேடையில் கூச்சப்படுவது!!.படபடவென்று பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கிவிட்டீர்கள்.இதுவும் ஒருவகையில் நன்றாகத்தான் இருந்தது.

அன்புடன்,

அ .சேஷகிரி.

*

அன்புள்ள சேஷகிரி

கூச்சம் இல்லை. அது ஒரு செயலின்மை. ஆங்கிலத்தினாலும் இல்லை. இதைவிட மோசமாக காவியத்தலைவன் விழாவில் என்னை நீங்கள் காணலாம்

பொதுவிழாவில் தன்னை முன்வைப்பது ஒரு பெரிய நடிப்பு. அதற்கு நிறையவே பழகவேண்டும். அது எனக்கு கைவருவதில்லை. பழகவேண்டாம் என்றிருக்கிறேன்

ஜெ

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 56
அடுத்த கட்டுரை‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ – எம். ஏ. சுசீலா