சுட்டி விகடனில்…

Chutti_Vikatan-Tamil-Logos-400-4

 

சுட்டி விகடனின் 18 ஆவது ஆண்டு நிறைவு இதழ் கடைகளுக்கு வந்துவிட்டது. அதில் நான் ‘வெள்ளிநிலம்’ என்று ஒரு குழந்தைகள் நாவலை எழுத ஆரம்பித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்பு தினமணி சிறுவர் மலர் இணைப்பில் நான் எழுதிய பனிமனிதன் நாவலின் தொடர்ச்சி இந்நாவல். அதில் வந்த பாண்டியன், டாக்டர், கிம் ஆகிய கதாபாத்திரங்கள் மட்டும் . திபெத், ஸ்பிடி சமவெளி, லடாக், பூட்டான் என கதையின் களம் இமையமலைதான்.

 

பனிமனிதனை குழந்தைகளாக வாசித்த பலர் என் வாசகர்களாக இன்று இருக்கிறார்கள். வாசிக்கும் குழந்தைகளுக்குரிய எழுத்து அது. அதாவது, நடை மிக எளிதாக இருக்கும். நிகழ்வுகள் சிக்கலற்றவை. ஆனால் அடிப்படையில் ஒரு தீவிரமான புனைவு. பனிமனிதன் ஆழமான மானுடக்கேள்விகளை எழுப்பிய நாவல். இதுவும் அவ்வகையிலேயே இருக்கும்

 

அடிப்படையில் இது ஒரு சாகசநாவல். குழந்தைகளுக்குப்பிடித்தமான மாயநிலம். பரபரப்பான சாகசக்காட்சிகள், கூடவே கொஞ்சம் அறிவியல் ஆகியவையே பனிமனிதன் மிக விரும்பப்பட்டமைக்குக் காரணம். இந்நாவலில் அறிவியலுடன் கொஞ்சம் வரலாறும் இருக்கும். ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம். குழந்தைகளுக்கு வாசிக்கக்கொடுக்கலாம். வாசித்துக்காட்டலாம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 31
அடுத்த கட்டுரைசிறுகதைகள் என் மதிப்பீடு -2