ஒரு மன்னிப்பு

வங்கி முதலிய சேவையிடங்களில் [நான் பணியாற்றிய நிறுவனத்திலும்கூட] மிகப்பெரிய பணிச்சிக்கல் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் எதையுமே கற்றுக்கொள்ள மறுக்கும்  ஊழியர்கள். மீண்டும் மீண்டும் அவர்களுக்குப் பயிற்சிகள் கொடுக்கிறார்கள். ஆனால் பயனிருக்காது. கவனக்குறைவு, அலட்சியம் இரண்டினாலேயே அனேகமாக வேலைக்குத்தகுதியற்றவர்கள். இவர்களில் மதுஅடிமைகள், நடுவயது கடந்த பெண்கள் அதிகம்.

 

ஆனால் தொழிற்சங்க உரிமைகள் இவர்களைப் பாதுகாக்கின்றன – தொழிற்சங்கத்தில் இருந்தவரை நானும் அதை ஆதரித்திருக்கிறேன். இது இன்றைய அரசுத்துறைகளில் உண்மையிலேயே உள்ள மிகப்பெரிய சிக்கல்.இவ்விருசாராரையும் பற்றி பலமுறை எழுதியும் இருக்கிறேன்.

 

இந்தப்பக்கம் மக்களுடன் மக்களாக நின்று பார்க்கையில் இது மிகப்பெரிய வதை. உண்மையை ஓரளவேனும் ஒத்துக்கொள்ளக்கூடிய எவருக்கும் இது தெரியும். அரசியல்சரிகளைப் பேசுவது வேறு விஷயம். அதைப்பேச வேறு பலர் இருக்கிறார்கள். என் அனுபவம், எண்ணத்தையே நான் எப்போதும் பேச நினைக்கிறேன். கூடுமானவரை என் எழுத்து என்பது நேரடியான உணர்வுப்பதிவுதான். நான் என்னை ஆன்றடங்கிய சிந்தனையாளனாக எப்போதும் முன்வைப்பதில்லை, நான் அப்படிப்பட்டவன் அல்ல. நான் உணர்வுரீதியான எழுத்தாளன் மட்டுமே.

 

அன்றுகாலை வங்கியில் எனக்கு ஏற்பட்ட இதே போன்ற அனுபவம் அது சார்ந்து வந்த மின்னஞ்சலுடன் சேர்ந்துகொண்டதனால் எரிச்சலில் இட்ட பதிவு அது. அந்தப்பதிவின் கோபமான சொற்கள் பிழையானவை என்று உணர்கிறேன்.  பி.ஏ.கிருஷ்ணன், இரா முருகன் போன்றவர்கள் எழுதியிருந்தனர். ஆகவே அப்பதிவை நீக்கும்படிச் சொன்னேன் [நான் காஞ்சிபுரம் வேலூர் பகுதியில் சமணக்கோயில்களைப் பார்க்கும் பயணத்திற்குப்பின் இன்றுகாலை தான் நாகர்கோயில் வந்தேன்]  . அதனால் புண்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

 

எப்படியானாலும் நாளும் வசை வருகிறது. உரிய காரணத்தோடு வசை இப்படி எப்போதாவதுதான் வருகிறது. அந்தவகையில் நல்லதே

 

*

 

ஜெ

 

முந்தைய கட்டுரைதீபாவளி யாருடையது?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11