காந்தியின் கருத்துலகு – சில பரிமாணங்கள்

cropped

அன்புள்ள ஜெ,

சிறுவயதில் ‘நல்ல வேளை சுட்டான். இல்லேன்னா நாட்ட இன்னுங்கெடுத்திருப்பான் பாவி’ என்ற என் பாட்டனாரின் கூற்றை அவ்வப்போது கேட்டதுமுதல் ஆரம்பித்தது காந்தியை உதாசீனம் செய்யும் மனநிலை. எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதையில் அவர் தாய் வெள்ளையர்கள் கடவுள் அவதாரமென்று நம்பியதையும் அவர்களே உலகை ஆளத்தகுதியுள்ளவர்கள் என்று கருதியதையும் எழுதியிருந்தார். என் பாட்டனார் அந்தவகையாக இருந்திருக்கலாம்.

பின் என் இருபதுகளின் மத்தியில் ஓஷோ எழுத்துக்களில் கிறங்கிக்கிடந்தபோது ‘காந்தி ஒரு போலி மகாத்மா’ என்பதாகக் கையில் கிடைப்பவர்களிடம் – ஓஷோவில் வாசித்ததை ஒப்பித்து – பலமுறை நிரூபித்திருக்கிறேன்!

இப்போக்கு முற்றிலுமாக மாறி, தற்போது முப்பதுகளின் மத்தியில், காந்தியின் மீது கவனமும் ஆர்வமும் உண்டானதற்கு உங்கள் கட்டுரைகள் முக்கியக்காரணம். அக்கட்டுரைகளை ‘இன்றைய காந்தி’யில் மீள்வாசிப்பும் செய்துவருகிறேன். வயதும் பொறுப்புகளும் கூடிக்கொண்டுபோவதும், அனுபவத்தின் விளைவாக எதையும் கொந்தளிப்பல்லாது ஆராய்ச்சிபூர்வமாக அணுகவேண்டும் என்ற நோக்கம் வளர்ந்திருப்பதும் மற்ற காரணங்களாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

காந்தியின் கல்வி, ஆரோக்கியவாழ்வு ஆகிய தொகுப்புகளை வாசித்து எழுதிய கட்டுரை சொல்வனத்தில் பிரசுரமாகியுள்ளது. இணைப்பு இங்கே;
http://solvanam.com/?p=46100

சிவானந்தம் நீலகண்டன்
சிங்கப்பூர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30
அடுத்த கட்டுரைகைவிடு பசுங்கழை