ஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்

 

 

ஜெ
ஐயோ ஜெ…. அமைதி அமைதி ..போதும்… பயணம் செல்லும் முன்னும் பின்னும் சொல்லும்  உங்கள் கட்டுரை குமுறல்கள் நடைமுறை உலகின் ( சில பகுதி ) நிதர்சனகள். உங்களின் idealistic உலகம் ( தமிழகத்தில் ) அனைவரும் தன் தன் கடமைகளை மிக சரியாக செய்தால் மட்டுமே வரும் – அரசாங்கம் மற்றும் அதன் நிர்வாகம் மிக மிக சரியான விதத்தில் ஓடினால் மட்டும் வரும் ஒரு விளைவு.
1. கம்பெனி உற்பத்தி செய்பவர்களுக்கும் அதை விற்பவர்களுக்கும் ( distributor/stockist, dealer, retailer ) இடையில் இருக்கும் எதிர்பார்ப்புகள் என்றும் சரி செய்ய முடியாதவை. உங்கள் நண்பர் சொன்னது போல, அந்த போலி பொருட்கள் இல்லை என்றால் b,c,d category ஊரில் வியாபாரம் செய்பவர்கள் நசித்து போவார்கள்.
2. எல்லா வகையான branded பொருட்களுக்கும் இந்த”முழு போலி” ( counterfeit ) அல்லது  நீங்கள் சொன்னது போன்ற எழுத்து பிழை போன்ற ” மயக்கும் போலி” ( duplicate )  ஆசிர்வாதம் உண்டு..கோவை, சென்னை போன்ற பெரு நகரங்களில் “counterfeit”… அடுத்து வரும் சிறு ஊர்களில் மற்றும் கிராமங்களில் இந்த “duplicate” உலகம் …
counter feit / duplicate என்று சொல்லப்படும் “போலி” களின் உலகம் மிக பிரமாண்டம். அது தரும் லாப சதவிகிதம் “ஒரிஜினல் ” தரும் லாப % சதவிகிதங்களை கொன்று போட்டு விடும் . பேனா, சோப்பு, ஷாம்பூ, பவுடர், முக பசை, தலை எண்ணை என FMCG industrykku நரக வேதனை தருபவை. குடிக்கும் பீர், நாம் உபயோகிக்கும் கரன்சி, ஆணுறை, பிரிண்டர் cartridges,வாட்ச்,perfume  என இதுதான் என்று அறியா பொருட்கள் மேல் எல்லாம் உண்டு இந்த “counter feit” and “duplicate” ஆதிக்கம்
இந்த “போலி” விற்பனர்களுக்கு இருக்கும் சந்தை அறிவு, பொருட்களின்  தேவை பற்றிய குறிப்புகள்வியாபாரிகளின் நாடி பற்றிய அவதானிப்பு, என்ன சொன்னாலும் அல்லது இந்த “போலி” களுக்கு எதிராக நடத்தும் “raid வேட்டை ” போன்ற மிரட்டல்கள் ஒன்றும் செய்யாதவை.
டிவி போன்ற consumer electronics அல்லது பைக் கார் போன்ற authomobile  உதிரி ( spares ) பொருட்களுக்கும் ( ball bearing, head lamps, wiper, engine oil ) இந்த “போலி” பொருந்தும்.
3. வாங்க வேண்டிய பொருட்களை வாங்க வேண்டிய இடத்தில வாங்கி கொள்ளுங்களேன். கோவை எத்தனை முறை சென்றீர்கள்? ஏன் company outlet அல்லது Arrow/Basics போன்ற outlet களில் Jockey வாங்க கொள்ள வில்லை?
நாகர்கோவிலில் Jockey  இல்லை என்றாலும் ராமராஜ் அல்லது poomex இருக்க கூடும். அந்த பெரிய “டவர் ரெடிமேட் ” கேட்டு பாருங்கள். கண்டிப்பாக louis philippes / arrow போன்ற சட்டைகளை வாங்கி வைத்து விற்காமல் மிக குறைவான விலையில் விற்று இருப்பார்கள் அல்லது திருப்பி அனுப்பி இருப்பார்கள் … சந்தைகேற்ற பொருட்கள் மட்டுமே இருக்க வேண்டும். branding மட்டும் செய்து விட்டு விற்பனை ஆகவில்லை என்றால் என்ன பயன்.
ஆபத்து எங்கே என்றால் மருந்துகளில், சோப்பு,ஷாம்பூ போன்றவைகளில் தரும் பாதிப்பு யாருக்கும் தெரிவதில்லை. கண்டிப்பாக நீங்கள் சொன்னது போன்ற அரசு அதிகாரிகளும் அவர்களை விலைக்கு வாங்கி கொண்ட வணிகர்களை அடக்கினால் மட்டுமே இது நடக்கலாம்.
( ஐரோப்பா சென்று விட்டு அமைதியுடன் வாருங்கள். மீண்டும் இந்த தாய் தமிழகத்தை பற்றி கொந்தளிக்காமல் இருக்க வேண்டி கொள்கிறோம் )
அன்புடன்,
லிங்கராஜ்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
அடுத்த கட்டுரைசிறுகதையின் வழிகள்