வரலாற்று ஊகங்களை அணுகுதல்

q

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வணக்கம். சமிபத்திய ‘சரஸ்வதி -ஒரு நதியின் மறைவு’ பிரசுரமான செய்தி தொடர்ந்து அவை ஆமோதிக்கும் சில கருத்துக்கள்.

கங்கா யமுனா சரஸ்வதி என்றே நினைவு வைத்திருந்தமையால் இந்த புத்தகத்தின் தலைப்பே (என்னது இந்திரா காந்தி செத்துடாங்களா… ;)) ஆர்வமுட்டியது. மேற்படி புத்தக விவரங்கள் நிங்கள் அறிந்தவைதான். இருப்பினும் ஒரு சாமானியனாக பெரும் உற்சாகம் ஏற்ப்பட்டது புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கீழ் வரும் செய்திகள்.

கூறிப்பாக, படிக்கையில் நிச்சியமாக ஓன்றிரண்டு செய்திகளில் நம்மை நேரடியாகவே தொடர்புபடுத்தி பார்க்காளாம். உதாரணங்கள், பகடைக்காய்கள் உருவவொற்றுமை, அரச இலைகள் பயண்பாடு, காக்காய் வடை சுட்ட கதை!

இன்னும் சில வற்றை ஒப்பிட்டுழதொடர்புபடுத்தி பார்க்காளாம் என்றே தொன்றுகிறது, அவைகள் புள்ளி கோலங்கள் (இந்த வகை கோலங்கள் பற்றி தனி மடல் விரைவில் அனுப்ப நினைத்துள்ளேன்) மற்றும் தரை ஓடுகள். செட்டிநாட்டு வட்டாரங்களில், திருவிழா காலங்களில் புள்ளி கோலங்கள் இன்னும் பிரசித்தி (இரத விதிகளில் மிக பெரிதாக இடப்பட்டிற்க்கும்) என்றே சொல்லலாம். மேலும் இந்த வகை கோலங்களிலிருந்து பரிணாமம் பெற்றுது போன்ற கோலங்கள் நகரத்தார் விசேஷங்களில் (http://elvisalakshi.blogspot.in/2011/04/chettinadu-kolam-for-pongal-marriages.html) கண்டிப்பாக இடம் பேற்றிருக்கும். இதே போல, தரை ஓடுகளை இன்று புலக்கததிலுள்ள ஆத்தங்கூடி தரை (http://www.peacockcolours.com/home-living/flooring/athangudi-tiles) ஓடுகளுடன் ஓப்பிடளாம்.

மக்களாள் (நாகரிகத்தால்) மதிப்பாக போற்றப்பற்ற ஒரு மறைந்து நதி, அவை மறக்கபடக்கூடாது என்ற வகையில் அந்த பெருமைகளை தொடர்ந்து காத்து வந்தது, உதாரணமாக, சரஸ்வதி வழிபாடு நதியின் கூறியாக கையில் கமன்டலம். அனைத்து (நுன், நினைவு)அறிவு தொடர்பானவைகளுக்கு முதல் கடவுள் இவளே. இதன் மூலம் எத்தனை தலைமறைகள் பிறப்பேடுத்தாலும் சரஸ்வதி மறக்கப்படமாட்டாள். ‘கங்கா யமுனா சரஸ்வதி…. கங்கா யமுனா சரஸ்வதி….’ என்று நாலாயிரம் வருடங்களாக ஒரு செய்தி வாய் வழியாகவே காத்து வரப்படுகிறது என்பது என்னும் பிரம்மிப்பு! மரபின் சிறப்பு என்றும் சொல்லலாம்தானோ?

இந்த அனுபவம் எனக்களித்த உற்சாகமன்பது, எங்கள் ஊரில் மடத்தில் நடைபெறும் இராமயணம் பிரங்கம் தொடர்ந்து நடைபெற இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற கொள்கை ஏற்படுத்தியது.

நன்றி!

நாராயண்ன் மெய்யப்பன்

 

 

அன்புள்ள நா.மெய்யப்பன்

மிஷேல் டானினோவின் இந்நூலின் மையக்கருத்துக்களை ஒட்டிய பல கட்டுரைகளை முன்பு சொல்புதிதில் வெளியிட்டிருக்கிறோம். இந்நூலின் முன்னூகங்கள் பலவகையிலும் முக்கியமானவை என நினைக்கிறேன். பண்பாட்டு, வரலாற்று முன்னூகங்களுக்குள்ள கட்டற்ற பாய்ச்சல்களும் ஆதாரமற்ற எழுச்சிகளும் இந்நூலிலும் உண்டு. ஆனால் இப்படித்தான் புதிய வாயில்களைத் திறக்கமுடியும் என்பதே இத்தகைய நூல்களின் சிறப்பு. இவ்வூகங்களில் கணிசமான பகுதி கறாரான ஆய்வுகளின் போக்கில் மெல்லமெல்ல மறுக்கப்படும். ஆனால் இவை ஒரு திசைதிரும்பலை உருவாக்கவும் செய்யும்.

 

இத்தகைய நூல்களை வாசிக்கையில் நாம் கொள்ளவேண்டிய எச்சரிக்கை ஒன்றுண்டு. ஒன்று, இவை ஆய்வுக்களத்தில் செய்யப்படும் முன்னூகங்கள். ஆய்வு முடிவுகள் அல்ல. ஒரு வரலாற்றுப் பண்பாட்டுக்களத்தில் ஆய்வுமுடிவுகள் என்பவை மெல்லமெல்ல தொடர்விவாதத்தின் இறுதியில் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டு உருவாகி வருபவை. முன்னூகங்களைத் தெரிந்துகொள்ளலாம். மிகை உற்சாகம் அடைந்துவிடக்கூடாது. அவற்றை ஒட்டி நாம் நெடுந்தூரம் சென்றுவிடக்கூடாது. ஏனென்றால் நாம் ஆய்வாளர்கள் அல்ல. அதற்கு எதிரான தரப்புகளையும் தெரிந்துகொண்டு அக்களத்தில் நாமும் இருப்பதே நாம் செய்யவேண்டியது.

 

ஆனால் , இதைப்போன்ற முன்னூகங்களை மூர்க்கமாக எதிர்ப்பவர்களையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் மதம், இனம் சார்ந்த முன்முடிவுகளில் கெட்டிதட்டிப்போனவர்கள்.பொதுவாக இந்தியா குறித்து, கீழைப்பண்பாடு குறித்து மேட்டிமைநோக்குடனும் ஆதாரமான கசப்புடனும் [அதற்குக் காரணம் மதக்காழ்ப்ப்பு அல்லது இனக்காழ்ப்பு என்பது எளிதில் ஊகிக்கக்கூடியது] ஆராய்ச்சிசெய்து ‘இறுதிமுடிவுகளை’ நம் மீது திணிக்கும் மேலைநாட்டு ஆய்வாளர்களே எண்ணிக்கையில் அதிகம். அவர்கள் அதற்கு ‘அறிவியல் அணுகுமுறை’ என்னும் ஒரு பாவனையை முன்வைப்பார்கள். ஆனால் அவர்களின் முன்முடிவுகளுக்கு எந்த அறிவியலடிப்படையையும் நாம் கோரமுடியாது.

 

இந்தியாவுக்கும் இந்துப்பண்பாட்டுக்கும் எதிராக எது சொல்லப்பட்டாலும் அது அறிவுபூர்வமானது என நம்பும் ஒரு மேலைநாட்டு ஆய்வாளர்வட்டமும் அவர்களே ஆய்வுக்களத்தின் இறுதிநீதிபதிகள் என எண்ணும் அடிமைக்கூட்டமும் நிறைந்துள்ள இந்தியப்பண்பாட்டு- வரலாற்றுச் சூழலில் அவர்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்புகளைச் சொல்லக்கூடியவை என்பதனாலேயே இத்தகைய நூல்கள் முக்கியமானவை. இவை ஒரு வகையில் புதியசாத்தியங்களை திறந்துவைக்கின்றன. இவற்றின்முடிவுகளை அல்ல கோணங்களை மட்டுமே நாம் கணக்கில்கொள்ளவேண்டும்

 

ஜெ

முந்தைய கட்டுரைசிறுகதைகள்: கடிதம்
அடுத்த கட்டுரைபன்னிரு படைக்களம் முடிவு