வெண்முரசு விமர்சன அரங்கு சென்னை -பதிவு

 

1

இன்று  [17-1-2016] நடந்த வெண்முரசு விமர்சனக்கூட்டத்தில்  27 பேர் கலந்துகொண்டோம்.

ஜானகிராமன் அவர்கள் தன்னால் வர இயலாது என்று சென்ற திங்கள்கிழமையன்றே தெரிவித்தார். உடனடியாக ஒரு மாற்று பேச்சாளரை தேட வேண்டிய நிலைமையாயிற்று. அருணாசலம் கைகொடுத்தார். ஒருநாள் டைம் கொடுங்கள் என்று கேட்டார். ‘சிறியன சிந்தியாதான்’என்கிற தலைப்பில் அவர் துரியோதனை பற்றிப் பேசுவதாக தெரிவித்தார். கட்டுரையை தயாராக்கிக் கையோடு கொண்டு வந்திருந்தார். மேற்கோள்கள் கொடுத்து அருமையாக பேசினார்

அந்த கட்டுரையை நிகழ் காவியத்தில் பதிவேற்றி லிங்க் தருவார் (எனநம்புவோம்)

இன்றைய கலந்துரையாடலில் தியாகராஜனும், மாரிராஜும் ( இவர் புது வாசகர்) சொன்ன கருத்துக்கள் விவாதத்தை நன்றாக முன்னெடுத்து சென்றன

தியாகராஜன் அவர்கள் தனது உரையாடலில், துரியோதனன் ஒரு மனிதன் ஆனால் அவனை எதிர்த்த ஐவரும் ஐந்து தேவர்கள். கூடவே அவதார புருஷனான கண்ணனும். இத்தனை பேர் சேர்ந்தும் அவனை நேர்போரில் கொல்ல முடிவதில்லை. வஞ்சகமாகவே கொல்கிறார்கள் என்று கூறினார். அதுதவிர, இதற்குமுன், என்.டி.ராமராவ் தவிர வேறுயாரும் துரியனின் நல்ல குணங்களைஎடுத்து சொல்லவில்லை என்று கூறினார்.

இரண்டாவது மாரிராஜ் சொன்னது. இவர் இன்றுதான் முதல்முறைவருகிறார். வெண்முரசின் வாசகர் ஆனால் இதுதான் அதுகுறித்த முதல் உரையாடல் என்று கூறினார்.

அருணாசலத்தின் உரையில் காந்தாரி துரியோதனனை கருக்கொண்ட நாளில் இருந்து அவள் கனவில் யானையும் காகங்களும் வருவதை சொல்லி விளக்கினார். யானை என்பது வேழம் என்ற சொல்லாலே குறிக்கப்படுவதையும் மேலும் அது மன விரிவை காட்டுகிறது என்றும் காகங்கள் மாந்தரீகம் அல்லது கெட்ட குணங்களை குறிப்பதாகவும் சொன்னார். அந்த உரையாடலில், காந்தாரியின் கனவில் காகங்கள் யானையை தூக்கிசெல்வது போல் வருவதும், இது துரியனின் நல்ல குணத்தை சுற்றியிருக்கும் காக்கைகள் அல்லது துர்சிந்தனைகள் தூக்கிச் செல்வதை குறிப்பதாகவும் மாரிராஜ் சொன்னது மிக பொருத்தமாக இருந்தது.

ராகவ் மற்றும் தியாகராஜன், யானை என்பது ஹஸ்தினாபுரியை குறிப்பதாகவும் அது சூழ்ச்சிகளால் கொண்டு செல்லப்படுவதை அது குறிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

அருணாசலம், வெண்முரசு கதாநாயகன் துரியோதனன்தான் என உணர்ச்சி பொங்க கூறினார். வாலியைக் குறித்து கம்பன் எழுதிய வாக்கியமான சிறியன சிந்தியாதான் என்பதை துரியோதணனுக்கு அற்புதமாக பொருத்தினார்.
ரகு, துரியனின் அந்திமகால நிகழ்வுகளை விவரித்து,அருணாசலம் அந்த அத்தியாயங்களை படிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டான் :-)

அதன்பிறகு இரவுணவு பரிமாறப்பட்டது.ஜாஜாவும் அஜிதனும் சைதன்யாவை ரேகிங் செய்து கொண்டிருந்தார்கள். நான் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன்.

காளிபிரசாத்

 

2

முந்தைய கட்டுரைவட்டார வழக்கு
அடுத்த கட்டுரைவாசகர் சந்திப்புகள்