காண்டீபம் முழுமை

இன்றுடன் காண்டீபம் முடிவடைகிறது. நான் ஒரு நாவலை தொடங்கும்போது அதற்கு அளிக்கும் உருவம் முடியும்போது எப்போதும் மாறிவிடுகிறது. அர்ஜுனனின் நான்கு மனைவிகள், அவனுடைய புற – அகப்பயணம் இதுதான் நான் எண்ணியது. ஆனால் என் எல்லா நாவல்களும் நானே மேற்கொள்ளும் பயணங்கள்தான். நானே புதியதாக கண்டடைவனதான்.

அர்ஜுனனின் அகம் என தொடங்கியபோதே காமம் மிகச்சிறிய பொருளாக ஆகிவிட்டது. அவன் ஓர் யோகி. அவனுக்கே கீதை சொல்லப்பட்டது. அவன் முழுவாழ்வும் கீதையை நோக்கித்தான். மெல்லமெல்ல அவனுடைய அகம் கொள்ளும் ஆழ்ந்த வினாக்களையே நானும் எதிர்கொண்டேன்.அவற்றில் முதன்மையானது வன்முறை. அதன் விடைநோக்கி சென்றது நாவல்.

முழுமையடைந்தபின் வழக்கம்போல நாவலின் முதல்வரியே அந்த முடிவுக்காக எழுதப்பட்டிருப்பதன் விந்தையை உணர்ந்தேன். முழுமையான கட்டமைப்புடன் நாவல் நிறைவுற்றது.

நிறைவும் வழக்கமான வெறுமையும் கொண்ட நாட்கள்.கொஞ்சம் பயணம், கொஞ்சம் வாசிப்பு, கொஞ்சம் சண்டை, சரியாகிவிடுவேன்.இன்னும் சிலநாட்களில் அடுத்த நாவலை தொடங்கிவிடுவேன்.

டிசம்பர் பத்தாம்தேதி முதல் என இப்போது நினைக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74
அடுத்த கட்டுரைஆசிரியர்