பரவா

mummy_1472607i (1)

“இன்னொரு காரணம் கிறித்தவ நூல் மரபு எகிப்திய பாரோக்களைப்பற்றி அளித்த சித்திரம். யூதர்கள் பாரோ மன்னர்களின் கீழ் அடிமைகளாக இருந்தார்கள், அங்கிருந்து கடவுளருளால் தப்பினார்கள் என்பது அவர்களின் குலக்கதை. அது பைபிளின் பகுதியாக இருப்பதனால் எல்லா கிறித்தவர்களிடமும் எகிப்து பற்றிய கொடூரமான ஒற்றைப்படைச் சித்திரம் உருவாகியிருந்தது.

இதுப் போன்ற தருணத்தில் தான் ஆசான் சறுக்கி விடுகிறார். எல்லா கிறித்தவர்களும் ‘Ten Commandments’ பார்த்து விட்டு வரலாற்றைத் தெரிந்துக் கொள்வதில்லை. மேற்கத்திய ஆய்வாளர்களும் பல்கலைக் கழகங்களும் ஆப்பிரிக்க கலாசாரத்தை நேர்மையோடு ஆராயவில்லையா? அவ்வப்போது ஆசான் ஜடாயு போன்றோருக்குத் தீனி போட்டுவிடுகிறார்.

ஜெ,

உங்களுக்கு ரொம்ம்ம்ம்ம்ப நெருக்கமான ஒருத்தர் இப்படி எழுதியிருக்கிறார். என்ன சொல்கிறீர்கள்?

அருண்

அன்புள்ள அருண்,

கிறிஸ்தவர்கள் என்று நான் சொல்வது என்னையும் சேர்த்துத்தான். நான் இதையெல்லாம் கற்றுக்கொண்டதே கிறிஸ்தவ ஆசிரியர்கள் மற்றும் போதகர்களிடமிருந்து. சின்னவயசிலிருந்தே சர்ச்சில் அடிக்கடிச் சொல்லப்படும் பரோவா மன்னர் எகிப்திய பாரோ என்று புரிந்துகொள்ள கொஞ்சம் தாமதமாகியது.

[கொல்லாக்கொலை செய்யுற இந்த பறவாகிட்ட இருந்து எங்கள காப்பாத்தி அனுதின மன்னாவை அளியும் கர்த்தாவே]

ஆப்ரிக்கா எகிப்து பற்றி நேர்மையான ஆய்வுகள் அமெரிக்க ஐரோப்பிய ஆய்வாளர்களிடமிருந்து கண்டிப்பாக வந்திருக்கும். ஏன், அக்கட்டுரையில் பேசப்பட்ட ஆய்வாளரே மேலைநாட்டவர்தானே? அவர்கள் இங்கே வந்து சேரவேண்டுமே?

அதுசரி, நெருக்கமானவர் என்றால்? அரங்கசாமி இந்த அளவுக்கு அறிவா எழுதமாட்டாரே?

ஜெ

முந்தைய கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் புகைப்படங்கள் 2
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 67