மின் தமிழ் இதழ் 3

cover

சி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துள்ள மின்தமிழ் இதழ் பெருமாள் முருகன் சிறப்பிதழாக அமைந்திருக்கிறது. பலகோணங்களில் பெருமாள்முருகனைப்பற்றிய் ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன. மாதொரு பாகன் பற்றிய சரவணக்கார்த்திகேயன் கட்டுரையும் நிழல்முற்றம் பற்றிய லேகா ராமசுப்ரமணியம் கட்டுரையும் கூளமாதாரி பற்றி கிருஷ்ணப்பிரபு கட்டுரையும் தெளிவான நோக்குகளை முன்வைக்கக்கூடியவையாக இருந்தன. ஒரு படைப்பாளியைப்பற்றிய இந்த விரிவான ஆய்வுக்கோவை முக்கியமான முயற்சி.

ஆனால் புனைவுகளும் கவிதைகளும் பெரும் சோர்வையே அளித்தன. விபச்சாரியைப்பற்றி கவிதை எழுதுவதெல்லாம் எண்பதுகளிலேயே சிறுபத்திரிகைகளில் சலித்துப்போன விஷயங்கள். கதைகளை எழுதியவர்கள் இலக்கிய அறிமுகமில்லாதவர்களாக, விகடன் குமுதம் கதைகளில் இருந்து உருவாகி வந்தவர்களாகத் தெரிகிறார்கள். உரையாடல்களையும் விவரணைகளையும் அமைத்திருக்கும் விதமும் கதைக்கட்டுமானமும் எல்லாம் வாரஇதழ்களில் எண்பது தொண்ணூறுகளில் புழங்கியவை. இத்தகைய இதழ்கள் இலக்கியத்திற்கான இடங்களாக இருக்கவேண்டுமென்பதே என் எதிர்பார்ப்பு. விகடனுக்குச் செல்லும் வழியாக இவற்றை பயன்படுத்துபவர்களை ஆசிரியர் தவிர்ப்பது நல்லது. விகடனே இருக்கும்போது ஏன் அங்கு செல்வதற்கான பயிற்சிக்கையேட்டை மெனக்கெட்டு வாசிக்கவேண்டும் என ஒரு வாசகன் கேட்கலாமில்லையா?

இதழை இங்கே காணலாம்: http://tamizmagazine.blogspot.in/2015/08/2015.html

முந்தைய கட்டுரைமதங்களும் ஏற்றத்தாழ்வும்
அடுத்த கட்டுரைமலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும்—ராஜகோபாலன்.