என்.ராமதுரை

திரு ஜெயமோகன்
பாலைவனத்தில் நகரும் கற்கள் பற்றிய எனது கட்டுரை பற்றிக் குறிப்பிட்டு எனது எழுத்தைப் பாராட்டியிருந்தீர்கள். அதற்கு மிக்க நன்றி. தமிழில் அறிவியலை எளிதாக எழுத முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் 30 ஆண்டுக்காலமாக எழுதி வருகிறேன். 81 வயதாகிறது. என் ஆர்வம் தான் எனக்கு தெம்பை அளித்து வருகிறது.

இலக்கியத்துக்கும் எனக்கும் அதிக தூரம். பயணக் கட்டுரைகள் பிடிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் நண்பர்களுடன் சமணக் கோயில்களுக்கு சென்றது பற்றிய கட்டுரைகளை மிக ஆர்வத்துடன் படித்தது நினைவிருக்கிறது. பயணக் கட்டுரைகள் எழுதுவது மிகக் கடினம். நிறையக் குறிப்புகள் தேவை. நினைவாற்றல் தேவை.

அன்புடன்
ராமதுரை

NR-profile

மதிப்பிற்குரிய ராமதுரை அவர்களுக்கு,

நான் மிகவிரும்பிப் படிக்கும் அறிவியல் எழுத்தாளர் நீங்கள். அறிவியலைக் கொண்டே சுவாரசியத்தை உருவாக்கமுடியும் என நம்புவதனாலும் உங்கள் எல்லைகளை தெளிவாக உணர்ந்திருப்பதனாலும் உங்கள் எழுத்து மிகவும் நம்பகமானதாக உள்ளது. அனேகமாக வாரம் ஒருமுறை உங்கள் இணையதளத்தை வாசித்துவிடுவேன்

அவை அறிவியல்செய்திகள் என்பதற்கும் மேலாக எனக்கு மனிதனைப்பற்றிய அடிப்படையான எண்ணங்கலை உருவாக்குபவையாகவும் இன்னொருபக்கம் என்னுள் உள்ள சாகசக்காரனை கனவுகாண வைப்பவையாகவும் உள்ளன. புனைவுஎழுத்தாள்னாக இது எனக்கு மிகமுக்கியமானது

சமீபத்தில் இரு கட்டுரைகளை அவ்வாறு வாசித்தேன் எரிமலை வாய்க்குள் இறங்கி சாதனை புரிந்தவர் முக்கியமான கட்டுரை. நேரடியான தமிழில் ஆச்சரியமூட்டும் தகவல்கள்

இன்னொன்று பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

இரண்டுகட்டுரைகளுமே கற்பனையைத் தூண்டின. மனிதன் எப்போதும் தன் எல்லைகளை வெல்லவே முயன்றுகொண்டிருக்கிறான் என்பார்கள். சாகசம் ஆராய்ச்சி கற்பனை எல்லாமே தன் முகங்கள்தான் என எண்ணிக்கொண்டேன்

ஜெ

முந்தைய கட்டுரைஆழி- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைநீலம் மலர்ந்த நாட்கள் -3