சு.வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது

இந்த வருடத்தைய பாரதிய பாஷா பரிஷத் விருது சு.வேணுகோபால் எழுதிய வெண்ணிலை சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னர் பிரசுரமாகாத கதைகளை மட்டுமே கொண்ட வெண்ணிலை தமிழின் முக்கியமான சிறுகதைத் தொகுதிகளில் ஒன்று. பல அபூர்வமான சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. தமிழினி வெளியீடு

சு.வேணுகோபால் தமிழின் முக்கியமான படைப்பாளி. நுண்வெளிக்கிரணங்கள் என்ற நாவலும் கூந்தப்பனை, பூமிக்குள் ஓடுகிறது நதி, களவுபோகும் குதிரைகள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியிருக்கிறார். கல்லூரி ஆசிரியராகப் பொள்ளாச்சியில் பணிபுரிகிறார்.

வேணுகோபாலுக்கு என் சார்பிலும் இந்த இணையதளத்தைச் சேர்ந்த நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துக்கள்


சு.வேணுகோபாலின் மண்

சு.வேணுகோபாலின் மண் 2

சு வேணுகோபால் பற்றி

சு.வேணுகோபால் ஒரு கடிதம்

கூந்தப்பனை


வெண்ணிலை, காவல்கோட்டம் விருதுகள்

முந்தைய கட்டுரைவிழா: இளங்கோ
அடுத்த கட்டுரைவிழா- கடிதங்கள்