சுரா- தினமணி

இன்றைய தினமணியில் சுந்தர ராமசாமி பற்றி ஒரு கட்டுரை உள்ளது. யாரோ ஒரு முதிரா ஆய்வாளர் எழுதியது என நினைக்கிறேன். அந்தக்கட்டுரையில் சுந்தர ராமசாமி பற்றி நான் சொன்னதாக ஒரு வரி வருகிறது. வாசித்து ஒரு கணம் அரண்டு போய்விட்டேன். அது என் வரி அல்ல. நான் எங்கும் முன்வைத்த கருத்தும் அல்ல. எதையோ அசட்டுத்தனமாக எழுதி என்னுடைய மேற்கோளாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள்.

இதை என்ன செய்வது? தினமணிக்கு மறுப்பு தெரிவிக்கலாம். சிலசமயம் அவர்கள் அதை பிரசுரிக்கலாம், ஆனால் எத்தனைபேர் கவனிப்பார்கள் என சொல்லமுடியாது. இந்தக்குறிப்பு ஓர் அரைவேக்காட்டால் எழுதப்பட்டது என்னும்போது இன்னும் அரைவேக்காடுகளுக்கு இந்த கட்டுரையே புரியும், பிடிக்கும். இதைத்தான் அவர்கள் இன்னும் மேற்கோள்காட்டுவார்கள். இது சென்றுகொண்டே இருக்கும். இதற்கு நான் பதில் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்

தமிழில் எழுதுவதற்கு நாம் கொடுக்கவேண்டிய விலை இது

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைதினமணி-சுரா-வினவு