ஆகஸ்ட் 27,28,29 [வெள்ளி, சனி, ஞாயிறு] தினங்களில் ஊட்டி நாராயண குருகுலத்தில் இச்சந்திப்பை நிகழ்த்தலாம் என்றிருக்கிறேன்.
வெள்ளி காலை 10 மணி முதல் ஞாயிறு மதியம் வரை. தத்துவம் குறித்து ஒருநாளும், தமிழ் மரபிலக்கியம் குறித்து ஒருநாளும், நவீனக்கவிதை ரசனை குறித்து ஒருநாளும் பேசலாம் என்பது இப்போதைய திட்டம். எப்படி அதை நிகழ்த்துவதென இனிமேல்தான் முடிவுசெய்யவேண்டும்.


மதராசப்பட்டணம் படத்தை இன்னொருதடவை பார்க்கச் சென்றிருந்தேன், முதல்தடவை சைதன்யா பார்க்கவில்லை. நான் திரையரங்கில் இருந்து ‘உன் படத்தை மீண்டும் பார்க்கப்போகிறேன். எப்படி தாங்கப்போகிறேன் என்று தெரியவில்லை’ என்று ஆரியாவுக்கு வேடிக்கையாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். உரக்கச்சிரித்தபடி ‘ஏன் அந்த விஷப்பரீட்சை?’ என்று தொலைபேசியில் கேட்டார். முதலில் பார்த்தபோது வெகுநேரம் எனக்கு படத்துடன் இணைய முடியவில்லை. காரணம் கொச்சின் வி.எம்.சி. ஹனீஃபா. படத்தின் தொடக்கத்தில் அவரது படத்தைக் காட்டி அவர் நடித்த கடைசிப்படம் என்றார்கள். அதன் பிறகு படம் [...]


அவருக்கு இலக்கியம் என்றால் என்ன என்று தெரியும். ஆனால் அந்த சவாலை அவர் சந்தித்ததே இல்லை. அவரது எழுத்துமனநிலையை ’தவிர்த்துச்செல்லும் தன்மை கொண்டது’ என்றே நான் சொல்வேன்


அம்மாவின் சுவை நரம்புகள் நெடுநாட்கள் முன்னரே மங்கிவிட்டிருந்தன என்று படுகிறது. சுவை பார்க்கக்கூட எதையும் நாவில் விடுவதில்லை. சமையலின் பக்குவம் அவள் கைகளில்தான் இருந்தது.


கற்பனாவாதக் கலை வாழ்க்கைமேல் ஓர் வெயிலிளமழையை பெய்ய வைத்துவிடுகிறது. கற்பனாவாதத்தை தாண்டிச்செல்லும் முதிர்ச்சி எனக்கு ஒருபோதும் வந்துவிடலாகாதென எண்ணிக்கொள்கிறேன்


நீங்கள் ஒரு குழுவடையாளத்தைச் சுமந்து கொள்வதும், அதன் பேச்சாளராக உங்களை எண்ணிக்கொண்டிருப்பதும் உங்கள் மனசிக்கல். அதை நான் அங்கீகரிக்க முடியாது.


அ.முத்துலிங்கத்தின் இணையதளத்தை பெரும்பாலும் இரவில் கடைசியாக வாசிக்கிறேன். விதவிதமான அன்றாட வாழ்க்கையனுபவங்கள் வழியாக செல்லும் அவரது நாட்குறிப்புகள் எப்போதும் என்னை மெல்லிய புன்னகையுடன் தூங்கச்செல்லவைக்கிறது.


கிருஷ்ணமேனனின் பேச்சு உரையாடல் போன்றது. அவர் எவருக்காகவும் பேசவில்லை என்று தோன்றும். ஒன்றில் இருந்து ஒன்றாக தொட்டுச் செல்லும் கேள்விகளும் விடைகளுமாக அது நீண்டு இயல்பான முடிவை அடையும். அபாரமான ஆங்கிலத்தில் மூளையைச் சொடுக்கும் கவித்துவச் சொற்றொடர்களுடன் அவை அமைந்திருக்கும்.


1997 முதல் 2000 வரை நான் தக்கலைக்கு அருகில் உள்ள பழைய கேரளத்தலைநகரமான பத்மநாபபுரத்தில் வாழ்ந்தேன். அப்போது பத்மநாபபுரத்தின் கோட்டைவாசலில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் முன்னால் ஒரு வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் சிறிய பீடத்தைக் கண்டிருக்கிறேன். அதில் ‘இங்குதான் குரு ஆத்மானந்தா தன் குருவைக் கண்டடைந்தார்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதில் அந்த வீட்டுக்காரர்கள் தினமும் விளக்கேற்றி வழிபடுவதுண்டு கிட்டத்தட்ட நான்குவருடம் அனேகமாக தினமும் இருமுறை அந்த நினைவுச்சின்னத்தைப் பார்த்தபடி நான் கடந்துசென்றிருந்தேன். பலமுறை போகிறபோக்கில் அதைப்பற்றிச் சிந்தனை செய்ததுண்டு [...]


வாசிப்பை விட வம்பு அதிகமாக உள்ள தமிழ்ச்சூழலில் எந்த இலக்கியவாதியும் சந்திக்க நேரும் சிக்கல் இது. ஏளனம், திரிபு, மூட்டிவிடுதல். இதைத்தாண்டித்தான் நாம் எழுத வேண்டியிருக்கிறது. இலக்கு தெளிவாக இருந்தால் அதைமட்டுமே நோக்கவேண்டும். என்ன செய்கிறோம் என்பதே பதிலாக அமையும்