ஈராறு கால்கொண்டெழும் புரவி 6
February 9th, 2010மறுவருடம் முதல் மாமரம் குலைகுலையாக காய்த்து கனத்து தழைய ஆரம்பித்தது. சித்தன்மரமென்று மலையேறி வந்து வணங்கி கனிகொய்து உண்டு இனிமையறிந்தனர் மக்கள்.
மறுவருடம் முதல் மாமரம் குலைகுலையாக காய்த்து கனத்து தழைய ஆரம்பித்தது. சித்தன்மரமென்று மலையேறி வந்து வணங்கி கனிகொய்து உண்டு இனிமையறிந்தனர் மக்கள்.
‘அக்ரஹாரத்தில் கழுதை’ பற்றி அல்லது ஜான் பற்றி ஆகா ஓகோ என்று கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் அந்தப்படத்தைப் பார்க்காதவர்கள், ஜானை அறியாதவர்கள். இன்னொருவகை உண்டு பார்த்தாலும் புரியாத, ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கும் பரிபக்குவமடைந்த, ‘அறிவுஜீவிகள்’.
ஞாநி அவரது இல்லத்தில் மாதம் தோறும் நடத்திவரும் எழுத்தாளர் சந்திப்பில் வாசகர்களை வருக என வரவேற்கிறேன்
மாமரம் செடியாகி மரமாகி நிழல்விரிக்கும் காலத்திலும் மலைமீதுதான் இருந்தார் பிள்ளை. மழையிருக்கும் காலத்தில் கொடுப்பைக்கீரையும் குப்பைக்கீரையும் காச்சில்கிழங்கும் சேனைக்கிழங்கும் பறித்துத் தின்றார். கானல் எரிந்த கோடையில் காரையிலையும் கூவைப்புல் கிழங்கும் தின்றார். கொட்டகையில் ஒவ்வொருநாளும் தன்னுடன் தான் மட்டுமாக சிறுதகரக்குடிலில் வாழ்ந்தார். தகரக்கொட்டகை காற்றில்பிய்ந்துசென்றபோது இன்னும் மேலே சென்று ஒரு நரிக்குகைக்குள் ஒதுங்கிக் கொண்டார். அக்குகையைத் தோண்டி விரிவாக்கி கல்லடுக்கிச் சுவர் கட்டி உள்ளே வாழ்ந்தார். அவர் பெயரை அறிந்த கோனார்கள் காலமாகி அடுத்த தலைமுறை உருவாகி [...]
உயிரின் இயல்பு ஆனந்தம் என்று கற்பிக்கிறது நம் மரபு. ஆகவேதான் அது இடைவிடாது ஆனந்தத்தை நாடுகிறது. தடைகளை அளிப்பவை நம் அகங்காரத்தின் விளைவுகளே. அவற்றை சற்றேனும் களைந்தால் நம் அகத்துக்கு ஆனந்தமாக இருப்பதெப்படி என்று சொல்லிக் கொடுக்கவேண்டியதில்லை!
4
ஒன்பது வருடம் சாஸ்தான்குட்டிப்பிள்ளையின் போதம் மண்புழுவென மண்ணைத் துளைத்து மீண்டு அலைந்தது. வேப்பங்குச்சியில் சத்தும் சித்தும் சந்திக்கும் ஆனந்தம் நின்றுநடுங்க மண்ணுள் நீரின் முடிவற்ற வரைபடச்சிக்கல்கல் இழைகளில் சொல்லிலும் மௌனத்திலுமாக செதுக்கப்பட்ட மந்திரங்களைக் கண்டார். இரவுகள் முழுக்க அவற்றை பெரிய நோட்டுப்புத்தகங்களில் முறைப்படி பகுத்தும் தொகுத்தும் எழுதிவைத்து அதன் மீது மீன்கொத்தி போல தொட்டுச் சீறி வளைந்தெழுந்து சுழன்று கரையோரமொதுங்கி மீண்டும் தொடப்பாய்ந்து அலைந்தார். கவ்விக் கொணரும் வரிகளெல்லாம் திருமூலரின் சொற்களென உணர்ந்த ஓர் இரவுக்குப் பிறகு [...]
ஒருபோர் என்பது உண்மையில் நம்பிக்கைகளுக்கும் யதார்த்தத்துக்கும் நடுவே நடக்கும் மோதல்தான் என்று சிலசமயம் சொல்லத்தோன்றுகிறது. இந்த எண்ணம் எனக்கு 1962 ஆம் ஆண்டில் நடந்த சீன இந்தியப் போர் குறித்து பிரிகேடியர் ஜான் தல்வி [Brigadier John Dalvi] எழுதிய ‘ஹிமாலயன் பிளண்டர்’ [ Himalayan Blunder] என்ற நூலை இருபதுவருடங்கள் முன்பு விழிபிதுங்க வாசித்தபோது உருவாகியது.
என்ன நடக்கிறது? ஒரு போர் நடக்கும்போது அந்தப்போரில் ஈடுபடும் இரு சமூக ராணுவங்களும் அரசியல்தலைமைகளும் தங்கள் சமூகத்தின் முழு ஆதரவை [...]
[3]
சாஸ்தான்குட்டிப்பிள்ளை முதன்முதலில் நாகம்மையின் உடலைப் பார்த்தபோது ”இது ஏம்ளா இப்டி இருக்கு ?” என்று கேட்டார். .நாகம்மை நொடித்து” பின்னே எப்டி இருக்கும்ணு நெனக்கியோ? வேறெ கண்டிட்டுண்டோ? ” என்றாள் .
அவருக்கு கொஞ்சநேரம் கையும் காலும் எதுவும் ஓடவில்லை. ”நான் எங்க கண்டேன் ? ஆனா…”
நாகம்மை வாரிச்சுருட்டி” என்ன ஆனா?” என்றாள்
“இப்பிடி இருக்கு?”
“பின்ன எப்பிடி இருக்கணும்?’
“இல்லே …உறக்கையின் கனி நிகரென இலகிய முலைமேல்- ண்ணாக்குமெ அருணகிரிநாதர் சொன்னது.. இது வலதுகாளை எடக்காளையக்காட்டிலும் மூப்புமாதிரி இருக்கே… ”
“அவன் கண்டான் [...]
அன்புள்ள ஜெயமோகன் ,
மறைந்த முதுபெரும் தலைவர் ஜோதிபாசு பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? சமீபத்தில் சண்டே இந்தியனில் ஜோதிபாசு பற்றிய கட்டுரையில் (ஜோதிபசு ஏன் இந்தியாவிற்கு தேவையில்லை http://www.thesundayindian.com/31012010/storyd.asp?sid=8422&pageno=1
) அவரைப் பற்றி முற்றிலும் ஒரு எதிர்மறையான சித்திரமே கிடைத்தது . இருபத்தி ஏழு வருடங்கள் ஆட்சி செய்தவர் இவ்வளவு அலட்சியமாக இருந்திருப்பார் என நம்ப முடியவில்லை.
–
shankaran e r
அன்புள்ள சங்கரன்
ஜோதி பாஸ¤வின் மரணச்செய்தி என்னை வருத்தமுறச்செய்தது. ஏனென்றால் சிறுவயது முதலே [...]
[2]
நாகம்மையை கல்யாணம் செய்துகொள்ளும்போது சாஸ்தான்குட்டிப்பிள்ளைக்கு இருபத்தெட்டுவயது. நாஞ்சில்நாட்டில் பிள்ளைவாள்களுக்கு மீசையின் பட்டு கனக்கும் முன்னரே மூத்தபெண் பச்சைமாவு தின்பதெல்லாம் சாதாரணம். ஆனால் பிள்ளைக்கு அவர் திருநெல்வேலியில் புலவருக்குப் படிக்கும்போது வசக்கேடாக மண்டையிலடித்துவிட்ட சைவசித்தாந்தமும் சித்தமருத்துவமும் அந்த உறுப்பு ஒரு திரவவடிகால் என்பதற்கப்பால் பொருள் கொள்ளமுடியாமல் செய்தன.
எல்லாம் தற்செயல்தான். திருநெல்வேலி கொக்கிரக்குளத்தில் அவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுக்கூரை சரிந்த குளுளுத்த கல்திண்னையில் கல்திண்டில் சாய்ந்து அமர்ந்திருந்த, சட்டையற்ற உடலில் சாம்பல் தடியங்காய் போல திருநீற்றுக்கோலம் பூண்ட, வயோதிகர் ‘தம்பி [...]