ஜெயமோகன்
சுயசிந்தனை

ஜெ, நீங்கள் எழுதிய ‘இன்றைய காந்தி’ , சத்தியாக்கிரகத்தைப் பற்றிய புரிதல் குறித்து எனக்குள் முதன் முதலாய்க் கேள்வி எழுப்பிய ஓஷோவின் கருத்திற்கு அடுத்த படிக்கு (அதற்கு எதிரான முடிவிற்கு) என்னைக் கொண்டு சேர்த்துவிட்டது. அந்த பாதிப்பில், என் அரைகுறை தமிழ்’99 layoutல் தட்டுத் தடுமாறித் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். நான் கேட்க விரும்புவது இதுதான். சொந்தமாக, எந்தக் கருத்துகளின்…எந்த ஊடகங்களின் பாதிப்பும் இல்லாமல் யோசிப்பது எப்படி? எந்தப் புதுமையான கருத்துக்களையும் (ஓஷோவின், உங்களது) மனது உடனடியாக [மேலும் படிக்க]

அருகர்களின் பாதை 14 - சூரத், தாபோய்

முந்தையநாள் தாமதமாகத் தூங்கியமையால் காலையில் நன்றாக விடிந்தபின்னர்தான் எழமுடிந்தது. ஆனால் குளிர் எஞ்சியிருந்தது. எழுந்ததும் குளிக்காமல் உடனே கிளம்பினோம். விடுதிக்குக் கீழே இருந்த தமிழ் ஓட்டலில் தாங்கமுடியாத டீ கொடுக்கப்பட்டதாக கிருஷ்ணன் சொன்னார். லாரி ஓட்டுநர்களுக்கான இடம். அவர்களுக்குத் தரத்தைவிட அளவே முக்கியம். சூரத்துக்கு வழிகேட்டதும் ஒருவர் முன்வந்து விரிவாக விளக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு இடத்திலும் வழிகாட்டும் பொறுப்பை ஒருவர் சிரமேற்கொண்டு வழிகாட்டி மேலதிக தகவல்களும் அளிப்பதுண்டு. போதையில் இருந்தாரென்றால் அன்பை மீறித்தான் வண்டியை நகர்த்தமுடியும். எங்குமே [மேலும் படிக்க]

அன்புள்ள ஜெ ‘Temple Grandin’ என்பவர் பற்றிய ஆவணப்படம் பார்க்க நேர்ந்தது. அவர் கால்நடைகளின் உணர்வுகளை அறியும் அபூர்வ ஆற்றல் கொண்டிருக்கிறார். பார்த்தவுடன் “யானை டாக்டர்” ஞாபகம் வந்தது. யானை டாக்டர் பற்றி ஏதாவது ஆவணப்படம் எடுக்கப்பட்டிருகிறதா என்று தேடினேன். எதுவும் சிறப்பாக இல்லை. :-( Temple Grandin பற்றிய BBC காணொளி http://www.youtube.com/watch?v=46ycu3JFRrA அவரைப் பற்றிய படம் (Trailer) http://www.youtube.com/watch?v=cpkN0JdXRpM TED காணொளி http://www.ted.com/talks/lang/en/temple_grandin_the_world_needs_all_kinds_of_minds.html நன்றி, பிரவின் சி தொடர்புடைய பதிவுகள்யானைடாக்டருக்கு ஒரு தளம்தினமணி -யானை [மேலும் படிக்க]

அருகர்களின் பாதை 13 - அஜந்தா

அஜந்தா ஔரங்காபாதில் இருந்து எழுபது கிமீ தூரத்தில் இருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த எல்லோரா மடம் ஔரங்காபாதில் இருந்து இருபத்தைந்து கிமீ தூரத்தில். அஜந்தாவைப் பார்த்துவிட்டுக் கிளம்பி மாலைக்குள் நாசிக் சென்று சேர்ந்தாக வேண்டும் எனத் திட்டமிட்டோம். எங்கள் பயணத்திட்டத்தில் அடுத்த இடம் மங்கிதுங்கி. மங்கிதுங்கி விசித்திரமான இரட்டை மலைகள் கொண்ட இடம். இந்துக்களுக்கும் சமணர்களுக்கும் இது முக்கியமானது. இந்த இடத்தின் வரலாறு இன்னும் எழுதப்படவில்லை. கிமு 3 ஆம் நூற்றாண்டுமுதலே இந்த இடம் ஒரு முக்கியமான புனிதத் [மேலும் படிக்க]

ந.முத்துசாமிக்கு பத்மஸ்ரீ

தமிழின் நவீனநாடகத்தை உருவாக்கியவர்கள் என இருவரைச் சொல்வது மரபு. ந.முத்துசாமி, செ.ராமானுஜம். முத்துசாமி தமிழின் சிறந்த சிறுகதைகள் சிலவற்றை எழுதியவர். தமிழின் சிறந்த சிறுகதைகளின் சிறிய பட்டியலில் கூட அவரது நீர்மை கதை இடம்பெற்றிருக்கும். பின்னர் நாடகங்களை எழுத ஆரம்பித்தார்.தொடர்ந்து தெருக்கூத்தை மீட்டு எடுப்பதில் ஆர்வம் காட்டினார். நாடகங்களுக்காகவும் கூத்துக்காகவும் கூத்துப்பட்டறை என்ற அமைப்பை நிறுவி நடத்திவருகிறார். ந.முத்துசாமிக்கு இவ்வருடம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. முத்துசாமிக்கு வாழ்த்துக்கள். தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை

அன்புள்ள ஜெ, உங்கள் அருகர்களின் பாதை 7 வாசித்தேன். 2008ல் 9 நண்பர்கள் பத்ரிநாத், கேதார்நாத் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் உத்தரகண்ட் மாநிலம் துவாரஹட்டில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் இரவு தங்கி, காலை பாபாஜீ குகைகள் செல்ல திட்டம். நண்பர்களில் ஒருவர் அமைப்பை சேர்ந்தவர். அவர் அனைவருக்கும் இரவுணவும் தங்குமிடமும் ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் மாலை ஆசிரமத்தை அடைந்து இரவுணவுக்காக போஜன ஆலயத்தில் தட்டுகளோடு வரிசையாக நின்றோம். எங்கள் வாகன ஓட்டுநர் இளைஞரும் வரிசையில் நின்றார். [மேலும் படிக்க]

அருகர்களின் பாதை 12 – எல்லோரா

எண்பத்தாறில் நான் தன்னந்தனியனாக அஜந்தா எல்லோராவுக்கு வந்தேன். அதன்பின் இது நான்காவது முறை. சென்றமுறை 2006இல் குடும்பத்துடன் வந்தபோது அஜிதனுக்கு லஸ்ஸி ஒவ்வாமலாகி நாலைந்து நாள் மருத்துவமனையில் படுத்திருக்க நேரிட்டது. அந்த நினைவு இந்த ஊரை அணுகியதுமே வந்தது. அப்படி எத்தனை கோடி மனிதர்களின் சொந்த நினைவுகள், எத்தனை ஆசாபாசங்கள் இந்தத் தொல்நகர் வழியாகக் கடந்துசென்றிருக்கும். இன்னும் சிலமுறை கூட நான் வரக்கூடும். பின் ஒருமுறை நான் இல்லாமலாவேன். இந்த மலைகளும் இந்த குகைகளும் என்றுமிருக்கும். காலையில் கிளம்பும்போது [மேலும் படிக்க]

இனிய ஜெ.எம்., கிட்டத்தட்ட மார்ச் மாதம் தொடங்கி இன்றுவரை இந்த 4 மாதங்களாக ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறேன். சில செட்டில்மென்டுகள் முற்றிலும் இந்த மாதம் முடிந்துவிடும். பிறகு ஜூலை 1 முதல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் (கடமைகளை முடித்துவிட்டு) விலகப்போகிறேன். ஆம் கிட்டத்தட்டத் துறவு. இனி எதற்காகவும் ஓடிக்கொண்டிருக்கப் போவதில்லை. 3 மாதகாலமாக எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை. இறுதியாக ரொமிலாதாப்பரின் சில புத்தகங்கள், இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு 1 , 2 அதுதான் படித்தது. புத்தகம் [மேலும் படிக்க]

அருகர்களின் பாதை 11 – மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா

இன்றைய பயணம் பெரும்பாலும் சாலையிலேயே கழிந்தது. காலையில் எழுந்ததும் விடுதியில் இருந்து கிளம்பி விடியும் நேரத்தில் நாசிக் ஔரங்காபாத் சாலையில் இருபத்தைந்து கிமீ விலகியுள்ள கஜபாத குன்றுகளை அடைந்தோம். கஜபாத மலையை தூரத்தில் இருந்தே கண்டோம். பெரும்பாலான சமணக் குன்றுகளுக்கு இருக்கும் அதே அமைப்பு. சுற்றிலும் பிரம்மாண்டமான நிலவெளி. நடுவே ஒரு இயற்கையான வட்டக்கோபுரம் போல மலை. காற்று அரித்துஅரித்துக் கதம்பர்களின் கோயில்களில் உள்ள வட்டத்தூண்களின் அமைப்பை உருவாக்கியிருந்தன. இந்த மலைகள்தான் அந்தத் தூண்களுக்கான முன்வடிவம் போலும். [மேலும் படிக்க]

அருகர்களின் பாதை 10 - லென்யாத்ரி, நானேகட்

ஜுன்னார் நகரை நகர் என்று சொல்ல முடியாது. நம்முடைய தென்காசி அளவுள்ள ஊர். நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு எட்டுப் பேருக்கு ஆயிரத்தைநூறு ரூபாய் சொன்னார்கள். எங்கள் பயணத்தைப்பற்றி சொன்னதும் ஆயிரம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார்கள். நான் அறைக்குள் வந்ததுமே முதலில் குளித்துவிடுவேன். உடனே அமர்ந்து பயணக்குறிப்புகளை எழுதுவேன். பழங்கள் உண்பேன். உடனே தூக்கம். அனேகமாக தினமும் பதினொரு மணிக்குத் தூங்கிக் காலை ஐந்து மணிக்கு விழித்தோம். தேவையான அளவுக்கு மட்டுமே தூங்குவதனால் அனைவரும் படுத்ததுமே தூங்கிவிடுவோம். காலையில் விடுதிக்காரர் வந்து வழியனுப்பினார். அவரே அருகே லென்யாத்ரி குகைகள் இருப்பதைச் சொன்னார். [மேலும் படிக்க]

© 2011 Jeyamohan காப்புரிமை: ஜெயமோகன்