இரவு 12

March 13th, 2010

அடிகள் உரத்தகுரலில் மந்திரங்களை கூவியபடி பலியர்ப்பிக்க ஆரம்பித்தார். எங்கோ ஒரு முரசு வீம் வீம் என்று அதிர ஆரம்பிக்க கண்டாமணி இணைந்துகொண்டது. அந்த அதிர்வின் ஓளிப்பிரதிபலிப்பாக இருந்தது பந்த வெளிச்சம்.

ஞானியர், இரு கேள்விகள்

March 12th, 2010

ஞானிகள் எங்கும் இருக்கிறார்கள். ஞானிகள் யாரென்று அறிந்து தேடுபவர்கள் கண்டுகொள்கிறார்கள். அதை ஒரு போலிஈஸ்காரனோ இதழாளனோ கண்டுபிடிக்க முடியாது. குருவை சீடன் மட்டுமே கண்டு பிடிக்கமுடியும்

இரவு 11

March 12th, 2010

இன்றிரவு
நான் தனியாக இல்லை
இரவு ஒரு தோழியாக
என்னுடன் இருக்கிறது
தன் தனிமையைப்பற்றி
என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறது.

 
காரை நெருங்கியதும் நீலிமா ”நீங்க ஓட்டுங்க” என்று சொல்லி நின்றுவிட்டாள். புதிய மாருதி எஸ்டீம் கார். நான் ஏறி அமர்ந்து சாவியை திருகி அதை உயிர்ப்பித்ததும் அவள் மறுபக்கம் வழியாக ஏறி என்னருகே அமர்ந்து கொண்டாள். நான் ”எங்க போகணும்?” என்றேன். அவள் ”எங்கயுமே போகவேண்டாம்… நான் கமலா ஆன்டிகிட்டே ஒண்ணும் சொல்ல்லை. அவங்களேதான் ஏதோ செய்றாங்க” என்றாள். ”காரிலே ஏறினா எங்கியாம் போய்த்தானே ஆகணும்?” என்றேன். [...]

புத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்

March 11th, 2010

என் மேஜையில் சில நூல்கள் இப்போது உள்ளன. ஏசுகிறிஸ்துவைப்பற்றிய சமீபத்திய ஆய்வுகள். Michael Baigent, Richard Leigh, and Henry Lincoln. எழுதிய The Holy Blood and the Holy Grail என்ற நூலை கஷ்டபட்டு வாசித்து முடித்து பெருமூச்சு விட்டேன். இந்த நூலை எப்படி புரிந்துகொள்வது. இதில் கடுமையான ஆராய்ச்சி உள்ளது. ஏசுவின் வரலாற்றைப்பற்றி பல்வேறு ஞானவாத கிறித்தவ நூல்களை அடிப்படையாகக் கொண்டு ஊகித்து எழுதப்பட்டது இது. ஏறத்தாழ இதே தலைப்பிலான இன்னும் இரு [...]

இரவு 10

March 11th, 2010

விண்மீன்குமிழிகள் மிதக்கும்
நதி இந்த இரவு
குறையாத கடலில் இருந்து
நிறையாத கடல் நோக்கி
ஒழுகிச்செல்கிறது.
மௌனமாக
நுரையில்லாமல்
 
 
நான் வாசலில் நின்றதைக் கண்டு நீலிமா அனிச்சையாக கால்வாசி எழுந்துவிட்டாள். முகம் மகிழ்ச்சியில் விரிய உதடுகள் எதையோ சொல்லவருபவை போல லேசாக பிளக்க வெண்பற்கள் உள்ளே செவ்விளக்கொளியில் தெரிய அவள் கணித்திரையில் கிரா·பிக்ஸ் உயிர்கொண்டு சற்றே அசையும் செவ்வியல் ஓவியம்போல் இருந்தாள். நான் என்னைத் திரட்டிக்கொண்டு ”ஐயம் ஸாரி..” என்றேன். மேனன் ”கமான்” என்றார் நான் சென்று நாற்காலியில் நீலிமாவுக்கு நேர் எதிராக அமர்ந்துகொண்டேன்.
நீலிமாவின் கன்னங்கள் திட்டுத்திட்டாகச் [...]

விமரிசகனின் தடுமாற்றங்கள்

March 10th, 2010

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு. தாங்கள் தாங்கள் முக்கிய எழுத்தாளர்களாக சிங்கையில் இந்திரஜித்தையும் மலேசியாவில் பாலமுருகனையும் குறிப்பிட்டீர்கள். என்ன சார் இது. எனக்கு தெரிந்த தரம் உங்களுக்குத் தெரியவில்லையா? இந்திரஜித் ஒரு தமாஸ் எழுத்தாளர் என தெரியவில்லையா? அது கிடக்கட்டும் போங்கள்.பாலமுருகன் பின் நவீனத்துவம் என தனக்குத்தெரியாத விசயங்களை புளோக்கில் உளறிக்கொட்டுவதை நீங்கள் படிப்பதில்லையா?

இரவு 9

March 10th, 2010

மரநிழல்கள் நடுவே பீய்ய்ச்சியிருந்த ஒளி சுண்ணாம்புநீரை வீசி வீசிக் கொட்டியது போலிருந்தது. கீழே கிடந்த காய்ந்த தென்னையோலைகள் சாம்பல்நிறமாக, செத்து மட்கிய கால்நடைகளின் விலா எலும்புகள் போலக் கண்களை உறுத்தின.

காமன் வுமன்

March 9th, 2010

நண்பர் ஒருவர் இந்த இணைப்பை அனுப்பி வைத்திருந்தார். எளிமையான நகைச்சுவை. நடுத்தரவர்க்கத்து வாழ்க்கையைப்பற்றிய முதல்தள மனப்பதிவில் இருந்து உருவாகும் இத்தகைய சித்திரங்களுக்கு எப்போதும் ஒரு சுவாரசியம் உண்டு.

இந்தியா குறித்த ஏளனம்…

March 9th, 2010

அன்புள்ள ஜெமோ,இங்கு எனது வெள்ளைகார நண்பர்கள் அடிகடி கூறும் இந்தியா பற்றிய கருத்து இது தான். இந்தியா ஏழை நாடு.இங்கு வேலை செய்யும் பல இந்தியர்கள் இந்தியர் அல்லாதவர்களிடம் அதிகம் பழகுவது இல்லை. பெரும்பாலனவர்க்கு நான் சொல்வது புரியுமா தெரியவில்லை.

இரவு 8

March 9th, 2010

தூங்கும் மிருகம் ஒன்றின் உடல்வழியாக ஊர்ந்துசெல்லும் பேன் போல நகரில் சென்றது டாக்ஸி. சாலையோரங்களில் வாழைத்தார் தண்டுகளும் காய்ந்த வாழையிலைகளும் கிடந்தன. கான்கிரீட் குப்பைக்கூண்டுகள் நிறைந்து வழிந்தன. புழுதிக்குழிகளில் நாய்கள் முகம் புதைத்து தூங்கின.